குமாரசாமி கெளம்புங்க.. எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் போராட்டம்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, எடியூரப்பா தலைமையில், பாஜக தலைவர்கள் பெங்களூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரும்பான்மை இல்லாமல் அரசை குமாரசாமி நடத்துவது சட்டவிரோதம் என்று கூறிய அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

"பதவி விலகு குமாரசாமி பதவி விலகு", "சபாநாயகரே நியாயமாக நடந்து கொள்ளுங்கள்", "பெரும்பான்மை இல்லாத அரசு அகல வேண்டும்" என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தலைமைச் செயலகமான விதான சௌதா பின்புறமுள்ள மகாத்மா காந்தி சிலையின் கீழே அமர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஈஸ்வரப்பா, கர்நாடக சபாநாயகரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. அவர் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்காமல் அவர்களிடம் விளக்கம் கேட்பதற்காக, நீண்ட கால அவகாசத்தை கொடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications