4 முறை எம்.எல்.ஏவான சிடி ரவி தோல்வி.. சிக்மகளூர் 'வாஷ் அவுட்'.. பாஜக கோட்டையை தகர்த்த காங்கிரஸ்!
பெங்களூர் : சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தம்மையாவை விட சுமார் 7 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி.
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978 லோக்சபா தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், வரலாற்று ரீதியாக, சிக்மகளூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துவந்தது. 2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த சிக்கமகளூரு தொகுதியில் அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.
2004 முதல் நடைபெற்ற அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவின் சிடி ரவி சிக்மகளூரில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு சிக்மகளூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சி.டி.ரவி 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சங்கர் பி.எல்-ஐ தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் 5வது முறையாக வெற்றி பெற தீவிரமாக வேலை செய்தார் சிடி ரவி. சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிக்மகளூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் திம்மாஷெட்டி மற்றும் காங்கிரஸ் சார்பில் எச்.டி.தம்மையா ஆகியோர் களமிறங்கினர். காங்கிரஸ் வேட்பாளரான தம்மையா, சி.டி.ரவிக்கு நெருக்கமானவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.டி.ரவிக்கு நெருக்கமானவராக இருந்த தம்மையாவையே அவருக்கு எதிராக களமிறக்கியது காங்கிரஸ். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிக்மகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்தார். சிடி ரவி.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தம்மையா. கர்நாடகா பாஜகவில் முக்கிய முகமாக பார்க்கப்படும் சிடி ரவி தோல்வியைத் தழுவியுள்ளார்.
சிக்மகளூர் தொகுதியில் தொடர்ச்சியாக 4 முறை எம்.எல்.ஏவாக இருக்கும் சி.டி.ரவியை தோற்கடித்ததோடு, சிக்மகளூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி.
முன்னர் பாஜகவில் இருந்து அண்மையில் காங்கிரஸில் இணைந்த தம்மையா சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1967இல் சிஎம்எஸ் சாஸ்திரிக்குப் பிறகு சிக்மகளூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது லிங்காயத் எம்எல்ஏ தம்மையா ஆவார்.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications