Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோதிரம் வாங்கிக் கொடுத்து.. மகளை கொலை செய்த தந்தை.. கண்ணை மறைத்த ஜா'தீ' வெறி - கர்நாடகாவில் 'ஷாக்'

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வேற்று ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் மூழ்கடித்து தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்வதற்கு முன்பு ஹோட்டலுக்கு சென்று தனது மகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுத்தும், அவர் ஆசையாக கேட்ட தங்க மோதிரத்தையும் அவரது தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

வேறு ஜாதி பையனை காதலிக்காதே என பல முறை கூறியும் மகள் கேட்காததால், அவரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 ஒரே மகள் - அதிக பாசம்..

ஒரே மகள் - அதிக பாசம்..

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா (52). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு சுஹாஷினி (20) என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரயில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ஒரே மகள் என்பதால் அவர் மீது ஓம்கார் கவுடா அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார்.

 வேற்று ஜாதி இளைஞரை..

வேற்று ஜாதி இளைஞரை..

இதனிடையே, சுஹாஷினி தனது கல்லூரியில் படிக்கும் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிந்ததால், மகள் சுஹாஷினியை அழைத்து ஓம்கார் கவுடா கண்டித்துள்ளார். "வேறு ஜாதியை சேர்ந்த பையனை நமது உறவினர்கள் ஏற்க மாட்டார்கள்.. எனவே இந்த காதல் வேண்டாம்" எனக் கூறியுள்ளார். ஆனால், சுஹாஷினியால் அந்த இளைஞருடனான காதலை விட முடியவில்லை. பெற்றோர் எவ்வளவோ கூறியும் தனது காதலில் உறுதியாக இருந்தார் சுஹாஷினி.

 கொலை செய்ய திட்டம்..

கொலை செய்ய திட்டம்..

மகளிடம் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ஓம்கார் கவுடாவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இனி விட்டால், அந்த இளைஞனை மகள் திருமணம் செய்து கொள்வார் என பயந்த அவர், மகளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் 31-ம் தேதி, கல்லூரிக்கு புறப்பட்ட மகளிடம், பக்கத்து தியேட்டரில் நல்ல படம் ஓடுகிறது. பார்த்து வரலாம் என ஓம்கார் அழைத்துள்ளார். தந்தையே படத்துக்கு அழைத்ததால் சுஹாஷினிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

 தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்து..

தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்து..

இதையடுத்து, சந்தோஷமாக தந்தையுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார் சுஹாஷினி. ஆனால், அவர்கள் செல்வதற்குள் அங்கு திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்கத்தில் உள்ள பெரிய ஓட்டலுக்கு சுஹாஷினியை அழைத்து சென்ற ஓம்கார் கவுடா, மகளுக்கு என்னென்ன பிடிக்குமோ அதையெல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், நகை கடைக்கும் அழைத்து சென்று ஒரு தங்க மோதிரத்தையும் மகளுக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, அருகில் இருந்த பெரிய ஏரிக்கு சுஹாஷினியை அழைத்துச் சென்ற தந்தை திடீரென அவரை நீரில் தள்ளினார்.

 கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

மகள் தண்ணீரில் மூழ்கி திணறுவதை பார்க்க முடியாமல் ஓம்கார் கவுடா அங்கிருந்து வந்துவிட்டார். பின்னர் போலீஸார் சுஹாஷினியின் உடலை மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, மகளை நான்தான் கொலை செய்தேன் என ஓம்கார் தெரிவித்தார். இதன்பேரில், போலீஸார் ஓம்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+