இதுவரை இல்லாத அளவு.. திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. அதிர்ச்சியில் கர்நாடகா
பெங்களூர்: கொரோனா வைரஸ் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து, முதல்முறையாக தற்போது கர்நாடகாவில் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Recommended Video
ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் சர்வதேச பயணிகள் அவ்வப்போது வந்து செல்லக்கூடிய நகரம் பெங்களூரு. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்ப காலகட்டங்களில் இங்கு அதிகமாக இருந்தது. தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் பதிவாகி வந்தனர்.
ஆனால் அதன்பிறகு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக அந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

அதிகரிப்பு
ஆனால் நேற்று முதல் முறையாக ஒரே நாளில் 36 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லா மாநிலங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கக் கூடிய நேரத்தில், அல்லது கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய நேரத்தில், முதல் முறையாக கர்நாடகாவில் அதிகரித்திருப்பது யோசிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.

நிலவரம்
கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 315 ஆக, அதிகரித்துள்ளது. இதேபோல பெங்களூரைச் சேர்ந்த 66 வயது நபர் நேற்று பலியாகியுள்ளார். கர்நாடகாவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூர் ஓட்டல் ஓனர்
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதாகும் இந்த நபர் பெங்களூரு நகரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தார். கொரோனாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து, கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று பலியானார்.

குழந்தைகள்
புதிதாக 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ள 36 நோயாளிகளில் 5 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகள், குறிப்பாக, வட கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். இதில், 14 பேர் பெண்கள் ஆகும். கல்புர்கி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன் மற்றும் விஜயபுரா நகரைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை போன்றவையும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications