ஓமிக்ரான் பரவல்: கர்நாடகாவிலும் டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு!
பெங்களூரு: நாடு முழுவதும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. டிசம்பர் 28-ந் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.

மகாராஷ்டிராவில் பாதிப்பு
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது.

பல மாநிலங்களில் ஊரடங்கு
மகாராஷ்டிராவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொது நிகழ்ச்சிகளுக்குமான கட்டுப்பாடுகளையும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிஷாவில் தடை
உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. குஜராத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஹரியானாவில் ஜனவரி 1-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பொதுநிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் ஒன்றுகூடவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஒடிஷாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில் கர்நாடகா மாநில அரசும் வரும் 28-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்த உள்ளது. மேலும் மிகப் பெரிய பொது ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கும் கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 97% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எஞ்சிய 3% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் சுதாகர். மேலும் ஜனவரி 10 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூச்சி போடப்படும் என்றும் அவர் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications