கர்நாடகாவை ஸ்வீப் செய்யும் பாஜக கூட்டணி.. காங்கிரசுக்கு பெரிய ஷாக் தந்த கருத்து கணிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாநிலத்தை ஸ்வீப் செய்யும் என மாத்ரூ பூமி- பி மார்க் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிகள் செல்வாக்காக உள்ள இடங்களில் கூட காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
இதனால் வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட பாஜக -ஜேடிஎஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக + ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இருகட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கும் 2வது கட்டமாக 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் என்பது ஏப்ரல் 26ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் என்பது மே மாதம் 4ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா லோக்சபா தேர்தல் தொடர்பாக மாத்ருபூமி நியூஸ் - பி மார்க் (Mathrubhumi News- P MARQ) சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை வழங்கி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் என்டிஏ எனும் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி 24 முதல் 27 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக கட்சியினர் உற்சாகமாகி உள்ளனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 1 முதல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி கடந்த 2019 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம், ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது.
இதனால் வரும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்க அதிக இடங்களை தருவார்கள் என அந்த கட்சி தலைவர்கள் நம்பும் நிலையில் இந்த கருத்து கணிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வென்றது. மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் , ஜேடிஎஸ் தலா ஒரு இடத்திலும் வென்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பி டிகே சுரேஷ், ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனான பிரஜ்வெல் ரேவண்ணாவும், மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications