இப்படி மட்டும் செய்தால் போதும்.. கொரோனா பக்கத்திலேயே வராதுல்ல
பெங்களூர்: கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்பதால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பெருமளவுக்கு கூடக் கூடிய இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தியேட்டர்கள் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. யாரும் நெருங்கி பழகி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நெருங்காமல் இருக்க வேண்டும், ஒருவருக்கு ஒருவர் தொடாமல் இருக்க வேண்டும் என்றால் இப்படி செய்யலாம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.
இதுதான் அந்த படம்.. ஒருவர் இரும்பு கம்பியை தனது வயிற்றை சுற்றி கட்டிக் கொண்டிருக்கிறார். அது எப்படியும் இரண்டு அடி தூரத்துக்கு அருகாமையில் யாரையும் நெருங்க விடாத அளவுக்கு உள்ளது. ஒருவேளை, யாராவது தும்மினால் கூட அது காற்றில் இவரிடம் வந்து சேரும் வாய்ப்பு கம்மி.
Best way to protect yourself from corona infection 😂#COVID19india pic.twitter.com/vJkMykBS29
— आचार्य 𝙎𝘼𝙃𝙄𝙇 (@AacharySahiL) March 14, 2020
யாரும் நெருங்கி பேச முடியாது, செம ஐடியாவாக இருக்கிறது. நாம் இவ்வாறு கட்டிக் கொண்டு நடக்கலாம் தான்.. ஆனால் கூடையை கட்டிக்கொண்டு நடக்கும் வடிவேலு கதாப்பாத்திரத்தை ஊரில் உள்ள நாய்கள், அனைத்தும், துரத்தும் நிலைமை நமக்கு வந்து விடுமோ என்று நினைக்கும்போதுதான் சற்று அச்சமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications