பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொந்தக்காரன்தானேன்னு நம்பி வீட்டுக்குள்ள விடாதீங்க - சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்

சொந்தக்காரன் முதல் ஆட்டோ ரிக்சா டிரைவர் வரை ஐந்து பேர் மைனர் சிறுமி ஒருவரை சீரழித்துள்ளனர். கர்ப்பமான சிறுமி அளித்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் குற்றவாளிகள் மூவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான இரு

Google Oneindia Tamil News

பெங்களூரு: விபரம் அறியாத மைனர் சிறுமியை லாட்ஜிலும், வீட்டிலும் மாறி மாறி சீரழித்துள்ளனர் ஐந்து கயவர்கள். இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையிலும் வெளியே சொன்னா கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். கர்நாடகாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே போல ஓடிசாவில் 17 மாத குழந்தையை சொந்தக்காரன் ஒருவனே பலாத்காரம் செய்து சீரழித்துள்ளான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி போராடி வருகிறது.

Minor girl gets pregnant after being molested five men

சிறுமியை சீரழித்தவர்களின் பெயர்கள் கணேஷ் நாயக், கிருஷ்ணப்பா, பவன், புனித் தனுஷ் என்பதாகும். கணேஷ் என்பவன் பாதிக்கப்பட்ட சிறுமியின் கசின். அந்த சிறுமியை சுப்ரமண்யாவிற்கு அழைத்துக்கொண்டு போய் இரண்டு நாட்கள் லாட்ஜில் வைத்து சீரழித்துள்ளான். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கிருஷ்ணப்பா என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். பவன் என்பவன் சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டான். போன் மூலம் பேசிய அவன், பெற்றோர்கள் கோவிலுக்கு போயிருந்த தருணத்தை பயன்படுத்தி சிறுமியின் வீட்டுக்கு வந்து பலாத்காரம் செய்துள்ளான்.

ஆட்டோ டிரைவர் தனுஷ் என்பவனும் சிறுமியை விட்டு வைக்கவில்லை. பள்ளிக்கு சென்ற சிறுமியை புனித் என்பவன் சுப்ரமணியா கோவிலுக்கு அழைத்து போய் அங்கே லாட்ஜில் வைத்து சீரழித்து விட்டான். ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது பற்றி தனது கசின் கணேஷ் இடம் கூறியதற்கு வெளியே இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளான்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர காரணமே சுகாதார நலத்துறை பெண் அதிகாரிகள்தான். சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவர்கள் சிறுமியிடம் வந்து பேச்சு கொடுத்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளாள் சிறுமி. சிறுமியை பரிசோதித்த ஆஷா அதிகாரிகள், ஐந்து பேரின் மீதும் போலீசில் புகார் அளிக்கக் கூறினர். இதனையடுத்தே தன்னை சீரழித்த நபர்கள் ஐந்து பேரைப்பற்றி போலீசில் புகார் கொடுத்தார் அந்த சிறுமி. ஐவர் மீதும் போக்சோ சட்டம், எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவு ஐபிசி 376, 506 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். மாயமான இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜராத்தில் ஆணவக்கொலை: சாதி மாறி திருமணம் செய்த இளைஞன்... வெட்டி சாய்த்த கும்பல் குஜராத்தில் ஆணவக்கொலை: சாதி மாறி திருமணம் செய்த இளைஞன்... வெட்டி சாய்த்த கும்பல்

17 மாத குழந்தை பலாத்காரம்

ஓடிசாவின் மயூர்பனாஜ் மாவட்டத்தில் 17 மாத குழந்தையை காமுகன் ஒருவன் சீரழித்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குற்றவாளியை கைது செய்து கடுமையான தண்டனை தரவேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் உறவினரான குற்றவாளியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
minor Dalit girl was allegedly molested by five men in Vittal in Karnataka.A case has been registered after the girl identified the accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X