புல்வாமா தாக்குதல்.. "கராச்சி" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு
பெங்களூர்: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக கராச்சி பேக்கரியின் பெயர் பலகையை அதன் ஊழியர்களை கொண்டே மர்ம நபர்கள் மூட வைத்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் மீது இந்தியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு செல்லும் உபரி நீரை இந்திய அரசு தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் கிரிக்கெட் வாரியத்திலிருந்து நீக்கப்பட்டது.

இந்திரா நகர்
புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விஷயங்களும் கடும் கோபத்தை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் இந்திரா நகரில் கராச்சி பேக்கரி உள்ளது.

கோஷம்
இது ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த பேக்கரிக்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 20 முதல் 25 எண்ணிக்கையிலான நபர்கள் பேக்கரிக்கு முன்பு வந்தனர். அங்கு பேக்கரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஊழியர்கள்
பின்னர் கராச்சி பேக்கரியில் கராச்சி என்ற வார்த்தையை நீக்குமாறு கோஷமிட்டனர். மேலும் அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த கராச்சி என்ற வார்த்தையை மூடுமாறு ஊழியர்களை மிரட்டினர். இதையடுத்து அவர்களும் அவ்வாறே செய்தனர்.

ராணுவம்
இதுகுறித்து கராச்சி பேக்கரியின் மேலாளர் கூறுகையில் அரை மணி நேரமாக அவர்கள் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். பெயரை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். ராணுவத்தில் உள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கூறினர்.

வழக்கம்
நாங்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அவர்கள் தவறாக நினைத்து விட்டனர். ஆனால் இந்த பெயரை நாங்கள் 53 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். எங்களது உரிமையாளர்கள் இந்து. பெயர் மட்டும் கராச்சி பேக்கரி. அவர்களை திருப்திப்படுத்த தேசியக் கொடியை ஏற்றினோம் என்றார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் பேக்கரி வழக்கம் போல் இரவு 11 மணிக்குதான் மூடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications