Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையா பதவியை காவு கொள்ளுமா கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு? முடா முறைகேடு வழக்கு- முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது முடா நில முறைகேடு வழக்கு. ஆளுநர் தம் மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்ததற்கு எதிராக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்திருக்கிறது. சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தது செல்லும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் சித்தராமையாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கும் முடா வழக்கின் விவரம்:

karnataka siddaramaiah muda scam

- முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்

- 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு முடா நிறுவனம் 14 வீட்டு மனைவிகளை ஒதுக்கீடு செய்தது

- சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்தது சட்டவிரோதம் என்பது புகார்

- சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சமூக ஆர்வலர்கள் டிஜே ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் மனு கொடுத்தனர்.

- சித்தராமையா விளக்கம் தர வேண்டும் என ஆளுநர் கெலாட், நோட்டீஸ் அனுப்பினார்

- ஆளுநர் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

- சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் கெலாட்

- சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் டிஜே ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோருக்கு ஆகஸ்ட் 17-ந் தேதி அனுமதி கொடுத்தார் ஆளுநர் கெலாட்.

- ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

- தம் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி மனுத் தாக்கல் செய்தார். முதல் நாள் விசாரணையிலேயே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

- கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகரபிசன்னா இந்த வழக்கை விசாரித்தார்

- கர்நாடகா உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆளுநர் கெலாட் தரப்பில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்; சித்தராமையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி ஆஜராகினர்.

- கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த 12-ந் தேதியுடன் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

- கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா சற்று முன்னர் அளித்த தீர்ப்பில், சித்தராமையாவின் மனுவை டிஸ்மிஸ் செய்தார். ஆளுநர் கெலாட், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்தது செல்லும் என தீர்ப்பளித்தார்.

- ஆளுநரின் அனுமதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் சித்தராமையா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

- சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக் கூடும்.

- ஆளுநர் அனுமதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் சித்தராமையா மேல்முறையீடு செய்யக் கூடும்

- கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில் சித்தராமையா முதல்வர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? சித்தராமையாவுக்கு நெருக்கடி உருவாகுமா? என்பது அடுத்தடுத்து தெரியவரும். இதனால் கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+