பெங்களூரில் மனித சங்கிலி போராட்டம்.. அழைப்பு விடுத்த கரப்பான் பூச்சி கட்சி! போலீஸ் அதிரடி தடை!
பெங்களூர்: பெங்களூரில் சமூக வலைதளங்களில் பெரும் அலைகளை ஏற்படுத்தி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) சார்பில் அறிவிக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி, நாளை மறுநாள் (மே24) காலை 11 மணிக்கு டவுன் ஹாலில் அமைதியான மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியிட்டது. தங்கள் பலத்தை வெளிப்படுத்தி, சுயநல நிர்வாகத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்பவே இந்தப் போராட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், அனுமதி கோரப்படாததால், காவல்துறை இதை திட்டவட்டமாக தடை விதித்தது.

அனுமதி மறுக்கப்பட்டதற்கு, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவும் ஒரு காரணம். அதன்படி, 'ஃப்ரீடம் பார்க்' தவிர பெங்களூருவில் வேறு எங்கும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. டவுன் ஹாலில் கூடினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
வைரலான அந்தப் போஸ்டரில், “காக்ரோச் ஜனதா கட்சியின் அனைத்து கரப்பான்பூச்சிகளும் மற்றும் ரசிகர்களும் எங்களது பலத்தைக் காட்டவும், சுயநல நிர்வாகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பவும் டவுன் ஹால் அருகே வாரீர்” என அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் எதிர்காலமின்மை, நீட் தேர்வுச் சுமை, விலைவாசி உயர்வு, வாக்குகள் திருடப்படுவது போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “வேலையில்லாத இளைஞர்களைக் கரப்பான்பூச்சிகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என ஒப்பிட்டதாகக் கூறப்பட்டதற்குப் பதிலடியாக, அரசியல் உத்தி வகுப்பாளர் அபிஜீத் திப்கேவால் அன்று இந்த கரபான்பூச்சி தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, காக்ரோச் ஜனதா கட்சி இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் (20 மில்லியன்) அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்று பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களை விட அதிக இணைய ஆதரவை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில்.. இடம் பிடித்த இந்தியன் சிட்டி! பெங்களூருக்கு தனி மவுசுதான்! -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு!












Click it and Unblock the Notifications