எனக்கு சந்தோஷம் இல்ல.. கடவுளை வேண்டிக்கிறேன்.. என்ன எடியூரப்பா இப்படி சொல்லிட்டாரு.. பாஜக ஷாக்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் தனக்கு சந்தோஷம் இல்லை என்று அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான, பி.எஸ்.எடியூரப்பா கூறிய கருத்து அந்த கட்சி தலைவர்களையே, திடுக்கிட வைத்துள்ளது.
பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கைதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பிரார்த்தனை
இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், கூறியதாவது: ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்கிறேன், டி.கே.சிவகுமாரின் கைது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்.

வெறுக்கவில்லை
நான் என் வாழ்க்கையில் யாரையும் வெறுக்கவில்லை, யாருக்கும் தீங்கு விளைவித்ததும் கிடையாது. நீதி அதன் கடமையை செய்யும். சிவகுமார் விடுதலையாகும் செய்தியறிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சிதான் அடைவேன்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதனிடையே சிவகுமாரின் கைது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், பொருளாதாரம் மற்றும் ரூபாய் வீழ்ச்சியை மறைத்து, வேலை இழப்பு போன்ற பிரச்சினைகளை மறைக்கும் ஒரு முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

நட்பு
இந்த நிலையில், எடியூரப்பா, இவ்வாறு கூறியுள்ள கருத்து, பாஜகவினருக்குள்ளேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிவகுமாருக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்ததால்தான், கடந்த கால ஆட்சியின்போது, எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications