பெங்களூர் அருகே திருடனை பிடித்துக் கொடுத்த நாய்
பெங்களூர்: பெங்களூர் அருகே வீட்டில் வளர்த்து வரும் நாய் திருடனை பிடிக்க உதவி செய்துள்ளது.
பெங்களூருவில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ராமநகரா. அங்குள்ள விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் வீட்டு நாய் ராமு குரைத்துக் கொண்டே இருக்க கண் விழித்த ஸ்ரீனிவாஸ் வெளியே வந்து பார்த்துள்ளார்.

நாய் கழிப்பறையின் வாசலில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஸ்ரீனிவாஸ் கழிப்பறை கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது அந்த பகுதியில் குப்பை பொறுக்கும் நபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
அந்த நபர் திருட வந்திருக்க வேண்டும். அவரை பார்த்த நாய் ராமு அவரை துரத்தவே கழிப்பறைக்குள் சென்று ஒளிந்திருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸ் புகார் அளிக்காததால் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டோம் என்றனர்.












Click it and Unblock the Notifications