விண்வெளி செல்லும் மனிதர்கள்.. தயாரான ககன்யான் மிஷன்! மாஸ் காட்டும் இந்தியா.. இஸ்ரோ சூப்பர் அப்டேட்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை அடைய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த மிஷனின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வெற்றி: கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏக்கம்: இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது. அதாவது, இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.
சோவியத் ரஷ்யா: சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். கடந்த 1917ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. நிலவில் முதலில் கால் வைத்தது மட்டும்தான் அமெரிக்கா செய்த ஒரே சாதனை. மற்றபடி முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளிக்கு முதலில் உயிரினங்களை அனுப்பியது, மனிதர்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஏராளமான சாதனைகளை செய்தது.
ககன்யான்: மட்டுமல்லாது இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை சோவியத் ரஷ்யா தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது. அப்படி இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தவர்தான் ராகேஷ் ஷர்மா. இதன் பின்னர் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. எனவே இந்த ஏக்கத்தை போக்க ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
வாய்ப்பு: இது குறித்து மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்டேஸ்வரன் கூறுகையில், "சர்வதேச அளவில் சீனா உட்பட பல நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவிட்டது. ஆனால் இந்தியா அனுப்பவில்லை. இதற்கான ஒரு முயற்சிதான் இந்த ககன்யான் திட்டம். மட்டுமல்லாது எதிர்வரும் 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் கலைக்கப்படுகிறது. இந்த மையம் பழையதாகிவிட்டது என்பதால் புது மையம் உருவாக்கப்படுகிறது.
இந்தியா: இந்த புது விண்வெளி மையத்தில் நாம் இடம் பெற வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இதற்கு மனிதர்களை நாம் விண்வெளிக்கு அனுப்பிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை நம்மால் எழுப்ப முடியும். எனவே இந்த வகையில் ககன்யான் திட்டம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இடம் கிடைத்துவிட்டால், நாம் விண்வெளி ஆய்வு துறையில் புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம்.
அப்டேட்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கான தயாரிப்பு பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அப்டேட் கொடுத்திருக்கிறது. அதாவது விண்வெளிக்கு சென்ற பின்னர் வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் க்ரூ மாட்யூல் (CM). இதனை விரைவில் சோதித்து பார்க்க இருப்பதாக இஸ்ரோ x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சோதனை: ஆனால் இந்த மாதம் இறுதியில் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லாத க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு செல்லும். பின்னர் சுமார் 17 கி.மீ உயரத்திலிருந்து இது கீழே விடப்படும். இந்த செயல்பாட்டில் க்ரூ மாட்யூலின் வேகம் 1.5 மாக் அளவாக இருக்கும். அதாவது சுமார் மணிக்கு 1,470 கி.மீ வேகத்தில் மாட்யூல் பூமியை நோக்கி விழும்.
ஆய்வு: ஒரு கட்டத்தில் மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து வங்க கடலில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் பத்திரமாக தரையிறங்கும். இதை இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழு மீட்டு கரைக்கு கொண்டு வரும். கரைக்கு வந்த பின்னர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் இந்த மாட்யூல் பரிசோதிக்கப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த திட்டத்தில் எந்த பிசிறும் தட்டவில்லை எனில், மிக நிச்சயமாக இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications