7 காங். எம்எல்ஏக்கள் மிஸ்சிங்.. பெரும்பான்மை இழந்த கர்நாடக அரசு.. சட்டசபையை நடத்த விடாத பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று குற்றம்சாட்டி, சட்டசபைக்குள், பாஜக எம்எல்ஏக்கள் 2வது நாளாக இன்றும் தர்ணா நடத்தியதால் அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 104 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதிலும், 224 தொகுதிகளை கொண்ட சட்டசபையில், அக்கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. மஜத தலைவர், குமாரசாமி தலைமையில் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இருப்பினும் ஆபரேஷன் லோட்டஸ் மூலமாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, நேற்று, கர்நாடக அரசின், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திடீரென ஆளும் கூட்டணியின், 10 எம்எல்ஏக்கள் மாயமாகினர்.
அனைத்து எம்எல்ஏக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கொறடா கணேஷ் ஹுக்கேரியும், உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் நேற்று சட்டசபைக்கு வரவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 1 எம்எல்ஏ வரவில்லை.
இருப்பினும் அதில் 3 பேர் மாலைக்குள் சட்டசபை வந்துவிட்டனர். இன்னும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிஸ்சிங். காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் ஆகும்.
ஆளும் கூட்டணியின் 7 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால், சட்டசபையில் 110 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இது மெஜாரிட்டி பலம் இல்லாத ஆட்சி என கூறி, பாஜக எம்எல்ஏக்கள் நேற்று முதல் சட்டசபையில் தர்ணா ஆரம்பித்துள்ளனர். நேற்று ஆளுநர் உரையின்போதும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இன்றும் சபாநாயகர் இருக்கை எதிரே நின்றபடி, ஆட்சி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்று கோஷமிட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், நாளை காலை 11 மணிக்கு சட்டசபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
சிகப்பு கம்பளம் விஜய்க்கு விரித்த பாஜக.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications