"அன்பிற்கு" கிடைத்த வெற்றி! கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ்.. ராகுல் காந்தி என்ன சொன்னார்
பெங்களூர்: கர்நாடக தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வரும் நிலையில், அங்கே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது அன்பினால் கிடைத்த வெற்றி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் இப்போது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று காலை அங்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது 120+ இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

இதன் மூலம் காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியைப் பலரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
ராகுல் காந்தி: கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெறுப்பின் சந்தை மூடப்பட்டுள்ளதாகவும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் கூறினார். மேலும், கர்நாடகாவில் அன்பு வென்றதாகவும் அவர் தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது தொடரும். ஏழைகளின் பிரச்சினைகளுக்காகக் காங்கிரஸ் போராடியது.. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அனைத்து ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும்" என்று அவர் உறுதியளித்தார்.
சரியாகப் போரிட்டோம்: அவர் மேலும் கூறுகையில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கர்நாடகாவில் ஏழைகளின் பிரச்சினைகளுக்காக நாங்கள் போராடினோம். நாங்கள் வெறுப்பு மற்றும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் போரில் ஈடுபடவில்லை" என்றார்
ஏறக்குறைய 140 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் எளிதாகத் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. 244 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக சுமார் 60 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது, இதற்கிடையே கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார்.
யார் முதல்வர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பதில் இப்போதே போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா, டிகி சிவக்குமார் என இருவருமே முதல்வர் ரேஸில் உள்ளனர்.
யார் முதல்வர் என்பது குறித்து அங்கே இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வந்த பிறகு நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே முதல்வர் யார் என்பது குறித்துத் தெரிய வரும்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, அங்கே முதல்வருடன் 3 துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்றே தெரிகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications