Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக முதலமைச்சராக “பிராமணர்”.. ஆர்எஸ்எஸ் சதித்திட்டம்! பிரஹலாத் ஜோஷியை இழுத்து விட்ட குமாரசாமி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கர்நாடகாவின் முதலமைச்சராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் குமாரசாமியின் இக்கருத்து விவாத பொருளாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று தெரிவித்து இருக்கும் கருத்து அம்மாநில அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

பிரஹலாத் ஜோதி கருத்து

பிரஹலாத் ஜோதி கருத்து

கர்நாடக தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரை நடத்துவது குறித்து பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அதற்கு போட்டியாக நவகிரக யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார். இது தொடர்பாக குமாரசாமியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குமாரசாமி பதில்

குமாரசாமி பதில்

இதற்கு பதிலளித்த அவர், "தலைநகர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். ஒரு கூட்டம் கூட்டியது. அதில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பிராமணரை நியமனம் செய்ய திட்டமிட்டப்பட்டது. அவருடன் துணை முதலமைச்சராக 8 பேரை நியமிக்கவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்து உள்ளது. யாரை எல்லாம் துணை முதலமைச்சராக்க முடிவு செய்துள்ளார்கள் என்ற பட்டியலும் எனக்கு உள்ளது.

2 வகை பிராமணர்

2 வகை பிராமணர்

ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் பலியாகிவிடக் கூடாது. பழங்காலத்திலிருந்து 2 வகையான பிராமணர்கள் உள்ளார்கள். ஒரு வகையினர் சமுதாயத்தை பிளவுபடுத்துபவர்கள். அவர்கள் புகழ்பெற்ற சிரிங்கேரி ஷரதா பீடத்தையும் அழித்துவிட்டார்கள். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் அந்த வகையை சேர்ந்தவர்தான்.

மகாத்மா காந்தி கொலை

மகாத்மா காந்தி கொலை

அவர்கள் மகாத்மா காந்தியை கூட கொலை செய்வதற்கு தயங்கவில்லை. இப்படி சமுதாயத்தை பிளவுபடுத்தும் பிராமணர்களுக்கு மகாராஷ்டிராவில் உள்ள பேஷ்வாக்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கும் 2 ஆம் வகை பிராமணர்களும் உள்ளார்கள். பிரஹலாத் ஜோஷியும் அந்த வகை பிராமணர்கள்தான்." என்று தெரிவித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+