நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்!

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Balaji Hassan on Sasikala | சிறையிலிருந்து விரைவில் வெளி வருவார் சசிகலா: பாலாஜி ஹாசன்- வீடியோ

    பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.

    இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    என்ன விதி

    என்ன விதி

    சிறை விதிகளின்படி ஒரு கைதி, தனது தண்டனை காலத்தில் பாதியை கழித்துவிட்டால், அவர்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை கிடைக்கும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து இப்படி பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    என்ன பெயர்

    என்ன பெயர்

    இதில் சசிகலாவின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வெளியான பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை. சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துவிட்டது.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

    விடுதலை ஆனார்

    விடுதலை ஆனார்

    பாதி தண்டனை காலத்தை கழித்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் ஊழல் வழக்கில் சிறை சென்று இருக்கும் சசிகலாவிற்கு இது பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.

    ஊழல் குற்றம்

    ஊழல் குற்றம்

    ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதில் நன்னடத்தையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் வழக்கை கவனத்தில் கொள்ள கூடாது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பியிடம் ஆலோசனை நடத்துவோம்.

    வாய்ப்பு உள்ளது

    வாய்ப்பு உள்ளது

    சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். விரைவில் சசிகலா வெளியே வருவார். அதற்கான ஆலோசனை செய்து வருகிறோம். சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது, என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+