"கர்நாடகா தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர்".. டி.கே.சிவகுமார் பேட்டி
பெங்களூர்: கர்நாடக மக்களின் குடிநீர் தேவை போக, அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து , அமைச்சர் துரைமுருகன் கடிதம் அளித்த நிலையில் டி.கே.சிவகுமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மிக குறைவாகவே உள்ளது. குறுவை பயிரை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை.

இதையடுத்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் வியாழக்கிழமை அன்று சந்தித்தார்.
அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கடிதம் அளித்து கோரிக்கை வைத்தார். ஒப்பந்தப்படி கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தினார்
இதற்கு பதில் அளித்த, கர்நாடகா துணை முதல் முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவை போகவே, அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்.

எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் நிச்சயம் கிடைக்கும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications