வானில் ஆட்டம் கண்ட ஹெலிகாப்டர்! கருகிய நடிகை சவுந்தர்யா! 17.04.2004, காலை 11 மணிக்கு நடந்தது என்ன?
பெங்களூர்: நடிகை சவுந்தர்யா (சௌந்தர்யா) மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து முழு விவரங்களையும் பார்க்கலாம். அதாவது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சவுந்தர்யா. இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்த நிலையில் 2003ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியரான ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து சவுந்தர்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அதன் பேரில் அவர் பாஜகவில் இணைந்தார். சவுந்தர்யா நடிகை மட்டுமல்லாமல் அவர் ஒரு மருத்துவரும் கூட!
பாஜகவில் இணைந்த சவுந்தர்யா
பாஜகவில் இணைந்ததும் அவர் பெங்களூரில் இருந்து ஆந்திராவின் கரீம் நகருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றார். இதற்காக அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூர் அருகே ஜக்கூர் விமான தளத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா (Cessna 180) எனும் ஹெலிகாப்டரில் தனது சகோதரர் அமர்நாத்துடன் புறப்பட்டார். மேலும் அந்த ஹெலிகாப்டரில் பாஜக நிர்வாகி ரமேஷ் காதம், விமானி ஜாய் பிலிப்ஸ் ஆகியோர் இருந்தனர்.
காலை 11 மணிக்கு
அதாவது ஆந்திராவின் கரீம் நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டது. அப்போது நேரம் காலை 11 மணி இருக்கும், அதாவது ஹெலிகாப்டர் புறப்பட்டு 5 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், டேக் ஆஃப் ஆனதும் செஸ்னா 150 அடி உயரத்தில் அதற்கு தேவையான வேகத்தை அதிகரித்துவிட்டு இடது பக்கம் திரும்பிய போது வெடித்து சிதறியது.
பெங்களூர் அருகே விபத்து
சரியாக பெங்களூர் அருகே உள்ள காந்தி கிரிஷி விக்யான கேந்திர வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அருகே வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்த வயலில் சோதனை செய்து கொண்டிருந்த இருவர் கூறுகையில் விமானம் வெடிப்பதற்கு முன்னர் மோசமாக தள்ளாடியது. எனினும் அவர்களை காப்பாற்ற விரைந்த போது வெடித்து சிதறியது. இதில் விமானமே தீப்பிழம்பானது, முற்றிலும் நொறுங்கிவிட்டது என தெரிவித்திருந்தனர்.

சவுந்தர்யா விபத்து
இந்த விபத்தில் சவுந்தர்யா உள்பட அவருடன் பயணித்த ஒருவர் கூட உயிருடன் இல்லை. சவுந்தர்யா இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரில் ஒருவரது உடல் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் கருகிவிட்டன. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கர்நாடகாவின் முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் ஜக்கூருக்கு விரைந்தனர்.
பாஜக நிகழ்ச்சிகள் ரத்து
அந்த நாள் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சவுந்தர்யாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அப்போது சவுந்தர்யா குறித்துதான் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வந்தது. அதன் பிறகு தற்போது 20 ஆண்டுகள் கழித்து சவுந்தர்யா மரணம் குறித்து மீண்டும் பேசப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications