பெங்களூரில் கர்ப்பிணி தாய் 'போட்டோ ஷூட்' ஆர்வம்.. 3 வயது குழந்தைக்கு இப்படியா ஆகணும்
பெங்களூர்: பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வரும் சரண்ராஜ் தொழிலதிபர் ஆவார். இவரது மனைவி ஸ்வாதி. இந்த தம்பதிக்கு 3 வயதில் லட்சுமேஷ்வர் என்ற ஆண் குழந்தை இருந்தது. ஸ்வாதி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஸ்வாதி பெங்களூர் புறநகரில் 'போட்டோ ஷூட்' எடுக்க முடிவு செய்தார். அப்போது 3 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு திருமணத்திற்கு முன்பு 'போட்டோ ஷூட் எடுப்பது வழக்கமாகிவிட்டது. பலரும் திருமணத்திற்கு முன்பு திரைப்படம் போல் டிரெய்லரே எடுக்கிறார்கள். சினிமா பாணியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதேபோல் திருமணத்திற்கு பின்பும் ஹனிமூன் வரை பல முறை போட்டோ ஷூட் நடத்தி ஆல்பம் போட்டு வைத்து நினைவுகளை சேமிக்கிறார்கள்.

இன்று பலருக்கும் விருப்பம்
அதேபோல் பல தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கர்ப்பமாக இருக்கும் போதும், அதாவது வளைகாப்பின் போதும் போட்டோ ஷூட் எடுக்கிறார்கள். அப்படி போட்டோ ஷூட் எடுக்கும் இடங்கள், நீர் நிலைகள், பூங்காக்களாக உள்ளன. அப்படித்தான் பெங்களூரில் கர்ப்பிணி தாய் போட்டோ ஷூட்டின் போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழந்தான்.
ஆண் குழந்தை
பெங்களூர் ஜே.பி.நகரில் தொழில் அதிபர் சரண்ராஜ். இவரது மனைவி ஸ்வாதி. இந்த தம்பதிக்கு 3 வயதில் லட்சுமேஷ்வர் என்ற ஆண் குழந்தை இருந்தது. ஸ்வாதி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். தற்போது ஸ்வாதி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். சரண்ராஜ் தொழில் அதிபர் ஆவார். அவர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் 'போட்டோ ஷூட்' எடுக்க ஸ்வாதி முடிவு செய்துள்ளார்.
சம்மதம்
இதற்கு சரண்ராஜும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, தனது தோழியுடன் 'போட்டோ ஷூட்' எடுக்க பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி அருகே உள்ள கிட்டனஹள்ளிக்கு தனது 3 வயது குழந்தையுடன் ஸ்வாதி சென்றுள்ளார். கிட்டனஹள்ளியில் உள்ள பூங்காவில் வைத்து ஸ்வாதியை, அவரது தோழி பல்வேறு கோணத்தில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
போட்டோ ஷூட்
அந்த சந்தர்ப்பத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரை மட்டத்திலான தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டது. இதுபற்றி தெரியாமல் ஸ்வாதி போட்டோ ஷூட் எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு தனது குழந்தையை காணவில்லை என்று ஸ்வாதி தேடினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications