பெங்களூர் டூ மண்ணடி.. புள்ளிகளை இணைத்து.. மோப்பம் பிடித்து வந்த என்ஐஏ.. குண்டு வெடிப்பில் திக்திக்
பெங்களூர்: பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன் குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபேவில் என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ புதிய விசாரணைகள் சிலவற்றை கையில் எடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
விசாரணை; ராமேஸ்வரம் கஃபேவின் என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ புதிய விசாரணைகள் சிலவற்றை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் ஏற்கனவே என்டிஏ இன்பார்மர்கள் கொடுக்கும் தகவலின்படி அடிக்கடி ரெய்டு நடப்பது வழக்கம். பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதன் ஸ்டைலை வைத்து எந்த பகுதி தீவிரவாத குழு இதை செய்தது என்று என்ஐஏ கணிக்கும். அதை அடிப்படியாக வைத்தே இந்த ரெய்டுகளை இப்போது என்ஐஏ செய்கிறதாம்.
முக்கியமாக இன்பார்மர்கள் கொடுத்த சில தகவலின்படி என்ஐஏ மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் சோதனை செய்கிறதாம். மிக முக்கியமாக ஏற்கனவே தமிழ்நாட்டில் ரெய்டு செய்து பல தகவல்களை டேட்டா பேஸில் வைத்துள்ள என்ஐஏ அதன் அடிப்படையில் இந்த ரெய்டை முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன?: ஏற்கனவே பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகிக்கும் நபர் ஒருவர் ஓட்டலின் வளாகத்திற்குள் ஒரு பையை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
போலீசாரின் கூற்றுப்படி, சந்தேகிக்கும் நபர் பையை ஓட்டலில் வைத்துவிட்டு குண்டுவெடிப்பு ஏற்படுவதற்கு முன்னர் வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர் மாஸ்க் கண்ணாடி அணிந்து , தொப்பி அணிந்து காணப்பட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் 12:56 மணிக்கு வெடிகுண்டு வெடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாக, சந்தேகிக்கும் நபர் 11:30 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து ரவா இட்லிக்கான டோக்கன் வாங்கி உள்ளார்..
சந்தேகிக்கும் நபர் பஸ்ஸில் குண்டு வெடிப்பிற்கு பின் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
அவர் எந்தப் பேருந்தில் சென்றார், எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பையை விட்டுச் சென்ற சந்தேக நபரை அடையாளம் காண, AI- இயங்கும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பெங்களூரு போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். சந்தேகிக்கும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரது முக அம்சங்கள் சிசிடிவி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அவரைக் கண்காணிக்க முக அங்கீகார அமைப்புகளைப் பயன்படுத்தி சோதனை செய்து வருகிறோம், என்று துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். .
வாஷிங் பேசின் அருகில் உள்ள வாடிக்கையாளர் அமரும் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடித்த இடத்தில் போல்ட், ஆணிகள் மற்றும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட டைமர் கருவியை போலீசார் மீட்டுள்ளனர். இது ஒரு கடிகாரம் அல்ல, ஆனால் ஒரு அதிநவீன மின்னணு டைமர் சாதனம். முதற்கட்ட விசாரணையின்படி, குண்டுவெடிப்பில் RDX போன்ற உயர்தர வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தடயவியல் சோதனை மட்டுமே எந்த வகையான வெடிமருந்துகள் என்பதை கண்டுபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications