முடா விவகாரம்.. சித்தராமையாவின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: முடா அமைப்பு சட்டவிரோதமாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டு மனைகளை ஒதுக்கியதாகச் சர்ச்சை வெடித்தது. இது குறித்து விசாரிக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க கோரி சித்தராமையா தொடர்ந்த வழக்கைக் கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முடா வீட்டுமனை ஒதுக்கீடு மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இது இப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் அனுமதிக்குத் தடை கோரிய சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதிமன்றம் ஏன் சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன புகார்: கர்நாடக முதல்வரான சித்தராமையாவின் மனைவிக்கு முடா சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகளை ஒதுக்கியுள்ளது என்பதே புகாராகும். இந்த விவகாரத்தில் பலரும் சித்தராமையா மீது புகார் அளித்திருந்தனர். இதன் மூலம் சித்தராமையாவின் குடும்பத்தினர் சுமார் 56 கோடி ரூபாய் பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கு ஏன்: ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 218ன் கீழ் தனக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அளித்த அனுமதியை எதிர்த்து சித்தராமையா வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக ஐகோர்ட் வழக்கை டிஸ்மிஸ் செய்துள்ளது.
ஆளுநர் அனுமதிக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த முடா நில பரிவர்த்தனையில் சித்தராமையாவுக்கு பங்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளதாக நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறினார்.
சித்தராமையா மனு டிஸ்மிஸ் ஏன்: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மேலும் கூறுகையில், "இழப்பீட்டுத் தொகை ரூ. 3.56 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அது எப்படி திடீரென ரூ.56 கோடியாக மாறியது. இதன் பின்னணியில் யாரும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வது கடினம்... முதல்வரின் குடும்பத்திற்கு ஆதரவாக விதி வளைக்கப்பட்டதா என்பதை விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
சித்தராமையா தனது மனுவில், ஆளுநரின் அனுமதி விதிகளை மீறுவதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவுக்கு முரணானது என்றும் சித்தராமையா தரப்பு வாதங்களை முன்வைத்தது. இது குறித்தும் நீதிபதி கூறுகையில், "ஒரு மாநில அரசின் கேபினட் என்பது முதல்வரால் பரிந்துரை செய்யப்படுகிறது.
எனவே, தங்களை நியமித்த முதல்வருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும் போது அவர்கள் பக்கச்சார்பு இல்லாமல் இருப்பார்கள் என்பது கடினம். மனுவில் கூறப்பட்டுள்ளவை குறித்து விசாரிக்க வேண்டும். இந்த பரிவர்த்தனையால் பயனடைந்த ஒரே குடும்பம் மனுதாரர் (முதல்வர் சித்தராமையா) உடையது மட்டுமே. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி நாகபிரசன்னா கூறினார்.
பிரச்சினை என்ன: அதாவது சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு, முடா கையகப்படுத்திய நிலத்தை விட அதிக சொத்து மதிப்புள்ள இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதே பிரச்சினையின் மைய கரு. மைசூருவில் உள்ள ஒரு முக்கிய சந்தைப் பகுதியில் அவருக்கு இழப்பீட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்தே விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications