திருமண நாள் பரிசு எங்கே? ஆத்திரமடைந்த மனைவி.. கணவனுக்கு கத்தி குத்து! அலறிய பெங்களூர்
பெங்களூர்: கர்நாடகாவில் திருமணநாள் தினத்தில், தனக்கு எந்த பரிசும் கொடுக்கவில்லை என மனைவி தனது கணவனை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. கணவன், மனைவி இருவரும் பெங்களூரின் பெலந்தூர் பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது சண்டைகள் உருவாகியிருக்கின்றன. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் படுத்தியதால் இந்த சண்டை பெரிய அளவில் வெடிக்கவில்லை. ஆனால் கடந்த 1ம் தேதி எதிர்பாராத வகையில், இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை வன்முறையாக வெடித்திருக்கிறது.

அதாவது இவர்களுக்கு திருமணமாகி கடந்த 1ம் தேதியுடன் ஓராண்டு ஆகிறது. எனவே திருமண நாள் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மனைவி எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கணவர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. காரணம் கணவரின் தாத்தா திருமண தினத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் உயிரிழந்திருக்கிறார். எனவே துக்கத்தில் இருந்த அவர், திருமண நாளை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.
இதுதான் சண்டைக்கான காரணம். அன்றைய தினம் இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் உருவாகியிருக்கிறது. திருமண நாளை பெரியதாக கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம், ஒரு கிஃப்டாவது வாங்கி கொடுத்திருக்கலாம் என மனைவி கேட்க, கணவன் ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்த.. வாக்குவாதம் சண்டையாக முற்றியிருக்கிறது. வழக்கம்போல அக்கம் பக்கத்தினர் தலையிட்டு, பிரச்னைக்கு சமாதானம் பேசி முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
அன்று இரவு சுமார் 1 மணி இருக்கையில் இவர்கள் வீட்டிலிருந்து பெரிய அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. கணவர், ரத்தம் சொட்ட சொட்ட கையை பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெலந்தூர் காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருமண நாளுக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்காததால், கணவரின் கையில் மனைவி கத்தி கொண்டு குத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குடும்ப வன்முறைகள் வளர்ந்து வரும் காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், அதனை நாம் இயல்பாக கடந்து சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது என மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications