தெருநாயுடன் "நடுரோட்டிலேயே".. வெறிபிடித்த இளைஞர்.. வீடியோவை பார்த்து அலறிய மக்கள்!
நாயை பலாத்காரம் செய்த நபர் கைதானார்
பெங்களூரு: கருமம்.. கருமம்.. ஒரு தெரு நாயுடன் நடுரோட்டிலேயே செக்ஸ் வைத்திருந்து இருக்கிறார் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.. அப்படிப்பட்ட அந்த அதிசய பிறவி யார் என்று தேடி கண்டு பிடித்து, அள்ளி கொண்டு போய்விட்டது போலீஸ்!
மைசூரு விவி புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோகுலம் 3வது ஸ்டேஜ் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குதான் ஒரு இளைஞர் ஒருவர், ஒரு தெருநாயுடன் உறவு கொண்டிருந்தார்.. அது ஒரு பெண் நாய்..
அந்த நாயுடன் நடுத்தெருவில் பலவந்தமாக பாலியல் உறவு கொண்டிருந்ததை, அந்த வழியாக சென்றவர்கள் கவனித்துள்ளனர்.. அதில் ஒருவர் இதை வீடியோவாக படம் பிடித்துவிட்டார்.
சோஷியல் மீடியா
அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டார்.. அது வைரலானதுடன், பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது. இதையடுத்து, மைசூரு மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு துறை அதிகாரி கேபி ஹரிஷ், விவிபுரம் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தந்தார்.. அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசாரிடம் தந்தார்..
இளைஞர்
அதை பெற்ற போலீசார் இளைஞரை கைது செய்ததுடன் அவர் மீது பிரிவுகளையும் வழக்கு பதிவு செய்துள்ளனர்... இப்போது இவர் பலாத்காரம் செய்த அந்த தெருநாயை தேடி பிடித்தனர்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண் நாய்க்கு மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டி இருந்ததால், ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரபரப்பு
இன்னும் அந்த ரிப்போர்ட் வரவில்லை.. இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நாய் என்றில்லை.. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாடுகள், கோழிகள், குரங்குகள் மீது இதேபோன்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன..
விலங்குகள்
இது ஒரு நாய்க்கு எதிரான மிருகத்தனம் என்றும், பலர் விலங்குகளை மதிக்காதது மற்றும் அவர்களின் பாலியல் வேட்கையை நிறைவேற்ற அவற்றைப் பயன்படுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழ ஆரம்பித்துள்ளது.