மின் கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு போகும் அபாயம்!
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் இருப்பதாக மின்நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் பால சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படாத காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான ஆர்டர்களை இழந்துள்ளன. தொடர்ச்சியான மின்வெட்டால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு மின் நுகர்வோரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக 15% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது தொழில் துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால் குறைந்த கட்டணத்துடனும் சீராக மின்சார விநியோகித்தடனும் இருக்கும் மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பாலசுந்தரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications