ரூ. 15,000 கோடிக்கு ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கிய கோட்டக் மஹிந்திரா
மும்பை: கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கி தன்னுடன் இணைக்க உள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கி தன்னுடன் இணைக்க உள்ளது. இதன் மூலம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் 42.73 சதவீத பங்குகளை வைத்துள்ள நெதர்லாந்தைச் சேர்ந்த ஐஎன்ஜி குழுமம் கோட்டக் மஹிந்திராவில் அதிகம் பங்குகள் வைத்துள்ள இரண்டாவது நிறுவனம் ஆகியுள்ளது.
இந்த புதிய இணைப்பு மூலம் கோட்டக், வைஸ்யா வங்கிக்கு நாடு முழுவதும் 1, 214 கிளைகள் இருக்கும்.
இது குறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியின் துணை தலைவரும், எம்.டி.யுமான உதய் கோட்டக் கூறுகையில்,

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோட்டக் மஹிந்திரா வங்கியுடன் இணைக்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய ரிசர்வ் வங்கி, போட்டி கமிஷன் ஆப் இந்தியா உள்ளிட்டவற்றின் ஒப்பதலை பெற்று இந்த டீல் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட பிறகு லாபத்தில் ஓடும் ஒரு வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இணைப்புக்கு பிறகு ஐஎன்ஜி வைஸ்யா வங்கி கிளைகளின் பெயர் கோட்டக் மஹிந்திரா வங்கி என்று பெயர் மாற்றப்பட உள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு இரு வங்கிகள் இணைக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் நஷ்டத்தில் ஓடிய பேங்க் ஆப் ராஜஸ்தான் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications