தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை “நோ” - வெள்ளிக்கிழமை வழக்கம்போல் இயங்கும்!
சென்னை: தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெள்ளிக் கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனால், வங்கிகள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை. 21 ஆம் தேதி ஆயுத பூஜை, 22 ஆம் தேதி விஜயதசமி, 23 ஆம் தேதி மொஹரம், 24 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இந்த தொடர் விடுமுறை காரணமாக நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல செயல்படும்.
இதேபோல், வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் சனிக்கிழமை 4 ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம் -
இன்னும் 450-ஐ கூட தொடவில்லை.. 717 டாஸ்மாக்கில் இதுவரை எத்தனை மூடப்பட்டுள்ளது? மந்தமான பணி? -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்! -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு!












Click it and Unblock the Notifications