ரூ. 14.5லட்சம் கோடி செல்லாத நோட்டுக்கள் டெபாசிட் - ரிசர்வ் வங்கி
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் ரூ.14.5 லட்சம் கோடி (94%)வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500மற்றும் ரூ.1000 ஆகியவற்றை செல்லாதவைகளாக பிரதமர் மோடி அறிவித்தார்.
செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கெடு அளிக்கப்பட்டது. தினசரியும் 4,500ரூபாய் வரை மாற்றித்தரப்பட்டது. பின்னர் அது ரூ. 2000 ஆக குறைக்கப்பட்டது. பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வங்கிகள் மூலமாக விநியோகித்து வருகிறது.

இந்நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்தாக வேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடியாகும்.
இந்நிலையில் இந்நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் நவம்பர்9ஆம் தேதியிலிருந்து டிசம்பர்ம் 30ஆம் தேதி வரையில் ரூ.14.5 லட்சம் கோடி வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. எனவே மதிப்பிழந்த ஒட்டுமொத்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் 94 சதவிகித நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
டெபாசிட் செய்யப்படாத நோட்டுகள் கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தப்படலாம். மேலும், நவம்பர் 9 முதல் டிசம்பர் 30வரையில் வெளிநாட்டில் வசித்துவந்தவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மதிப்பிழந்த நோட்டுகளை செலுத்த, மார்ச் 31வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 94 சதவிகிதம் என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications