1% கலால் வரிக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் நகைக்கடைகள் அடைப்பு
சென்னை: தங்க நகை மீது விதிக்கப்பட்ட 1% கலால் வரியை ரத்து செய்ய கோரி நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் கடையடைப்பு போராட்டத்தால் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் 21 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு நகை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமீபத்தில்ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்ற உத்தரவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மார்ச் 2ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்தனர்.
நகைக்கடைகள் அடைப்பு
அதன்படி, நேற்று காலை முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் தி.நகர், சவுகார்பேட்டை, புரசைவாக்கம் உள்பட எங்கும் நகைக்கடைகள், உற்பத்தி கூடங்கள் திறக்கப்படவில்லை.
உற்பத்தி கூடங்களும் மூடல்
மதுரையில் 1000 கடைகளும், சேலத்தில் 300 கடைகளும், நெல்லை மாவட்டத்தில் 1500 கடைகளும், கோவையில் 700 கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகைக்கடைகளுடன், நகைப்பட்டறைகளும் மூடப்பட்டுள்ளதால் நகைக்கடைகள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வருவாய் இழப்பு
தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உற்பத்தி கூடங்கள் மற்றும் அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் ரூ.1000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமை அதிகாரிக்கும்
சமீபத்தில் ரூ 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் அவசியம் என அறிவிப்பால் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை நீக்க வேண்டும் என தொடர்ந்து பல முறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சதவீதம் கலால் வரி மேலும் சுமையை அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ. 21ஆயிரம் கோடி
நாடு முழுவதும் 8 லட்சம் நகைக்கடைகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் கோடியும், 3 நாட்களில் 21 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும். என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications