ரயில் சரக்குக் கட்டணம் 15% உயர்கிறது.. அக்.1 முதல் அமல்

அடிக்கடி உயர்ந்து வரும் டீசல் விலையேற்றத்தால் ரயில்வே நிர்வாகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே பண்டிகை காலங்களில் ரயில்களில் அனுப்பப்படும் சரக்குகளின் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அக்டோபர் முதல் ஜூன் வரையிலான 9 மாதங்களில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன.
இந்த நாட்களில் ரயில்களில் அனுப்பப்படும் சரக்குகளுக்கு 15 சதவீத கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கும் இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சரக்கு கட்டண உயர்வுடன், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக்சபா பொதுத்தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது.
உணவு தானியங்கள், சிமெண்டு, வேதிப்பொருட்கள், இரும்பு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். ஆனால் கண்டெய்னர்கள் மற்றும் வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுவதை முன்னிட்டு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை மறுத்த ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி, பண்டிகை கால சரக்கு கட்டண உயர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
ரயில்களில் அனுப்பப்படும் சரக்கு கட்டண உயர்வால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications