ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை - 6.25 % தொடரும் - உர்ஜித் படேல்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 6.25 சதவிகித வட்டி விகிதமே தொடரும் அறிவித்துள்ளது.
டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். ஏற்கனவே உள்ள 6.25 சதவீத வட்டி விகிதமே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
2017-18-ம் ஆண்டுக்கான கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெளியிட்டார். 2017-18-ம் ஆண்டில் முதல் ஆறு மாதத்திற்கு பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தால் ஒழுங்குமுறை பாதிக்கும் என்றும் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 6.25 சதவிகித வட்டி விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் குறுகிய கால கடன் வட்டி 6.25 சதவிகிதம் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்தார்.

ரிவர்ஸ் ரெப்போ
அதே சமயம், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்ககான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி
நடப்பு நிதியாணடில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றார். 2017 - 18 முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 4.5 சதவிகிதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

வாராக்கடன்
விவசாய கடன் தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்த அவர், இது கடன் வழங்கும் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் விவசாய கடன் தள்ளுபடி பாதிக்கும் என்றார். 2016 - 17-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வாராக்கடன் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்கள்
விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் பண வீக்கம் அதிகரிக்கும். ஆர்.பி ஐ ஆளுநர் உர்ஜித் படேல். நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில் விவசாயக்கடன் தள்ளுபடி இருக்கும் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை
விவசாய கடன் ரத்து செய்வது முறையாக வரி செலுத்துவோரின் பணம் விரயமாக்கப்படவதற்கு சமமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இது முறையான கடன் கொள்கையை சீர்குலைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர், இதனால் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications