ரூபாய் மதிப்பு ஏற்றம்- பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்! 3 ஆண்டு இல்லாத உயர்வு!!
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதால் 3 ஆண்டுகள் இல்லாத வகையில் மும்பை பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்காவின் ஷட்டவுன் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 61.22ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தின் போது இது 60.94ஆக ஏற்றம் கண்டது,
அத்துடன் சர்வதேச பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் இருந்தது. வங்கி மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததாலே பங்குச் சந்தைகளின் புள்ளிகளும் உயர்ந்திருந்தன.

மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே புள்ளிகள் ஏறுமுகமாக காணப்பட்டது. பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் புள்ளிகள் ஏறக்குறைய 350 புள்ளிகள் உயர்ந்து 20,765 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 6,137 ஆக காணப்பட்டது.

வங்கி பங்குகள் உயர்வு
ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகளின் பங்கு மதிப்புகள் 2.5% முதல் 4.5% வரை உயர்ந்து காணப்பட்டது.

உலோக நிறுவனங்களின் பங்குகளும் உயர்வு
இதேபோல் டாடா ஸ்டீல், செஸா ஸ்டெர்லைட், லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்து காணப்பட்டது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications