ரூபாயின் மதிப்பு மேலும் கொஞ்சம் உயர்ந்தது.. 6வது நாளாக தொடர் சாதனை!: 62.92 ஆனது
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் கொஞ்சம் வலுவடைந்துள்ளது.
நேற்று 63.38 என்ற நிலையை எட்டிய ரூபாய் மதிப்பு இன்று மேலும் உயர்ந்து 62.92 என்ற நிலையை அடைந்துள்ளது.
கடந்த 6 நாட்களில் ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல டாலருக்கு நிகரான அனைத்து ஆசிய நாடுகளின் கரன்சிகளின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியையடுத்து அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து, அந் நாட்டு தொழில்துறைக்கு உதவி செய்தது. இதற்காக 85 பில்லியன் டாலர் அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி வழங்கியது.
இப்போது இந்த உதவிகளைக் குறைக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. மேலும் கொடுத்த நிதியுதவிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்ய உலகளவிலான முதலீட்டாளர்களிடையே போட்டி உருவானது. இதனால் தான் டாலர் மதிப்பு அதி வேகமாக உயர்ந்தது.
இந் நிலையில் அடுத்த வாரம் கூடவுள்ள அமெரிக்க அரசின் Open Market Committee, டாலரின் மதிப்பை நிலைநிறுத்த மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. ஆனால், பெரிய அளவில் இந்தக் கமிட்டி எந்த முடிவையும் எடுக்காது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக அந் நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய நிதி உதவிகள் பெரிய அளவில் திரும்பப் பெறப்படாது என்று தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்க பங்குகளில் முதலீடுகள் செய்வது குறைந்து, ஆசிய பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளின் கரன்சிகளின் மதிப்பும் உயர ஆரம்பித்துள்ளது.
மேலும் சிரியா மீது இப்போதைக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போவதில்லை, இதனால் கச்சா எண்ணெய் விலை உயரப் போவதில்லை என்பதும் ரூபாய் உள்ளிட்ட ஆசிய கரன்சிகளின் மதிப்பு உயர இன்னொரு முக்கிய காரணமாகும்.
-
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications