முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. கடும் சரிவில் தொடங்கிய இந்திய பங்குசந்தை
சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது
மும்பை: தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் தொடங்கிய சில விநாடிகளில் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலையடைந்துள்ளனர்
சர்வதேச பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் சரிந்து 33,742 என்ற நிலையில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது.

பங்குசந்தை கடும் வீழ்ச்சியால் சில வினாடிகளிலேயே ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவித்த நாள் முதலே இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நாளின் முடிவில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவார்கள் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வாரத்தின் இரண்டாவது நாளான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து 64.36 ரூபாயாக உள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையிலும், அதையொட்டி, மற்ற சில ஆசிய சந்தைகளிலும் காணப்பட்ட சரிவும், இன்றைய இந்திய சந்தையின் தொடர் சரிவுக்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications