முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. கடும் சரிவில் தொடங்கிய இந்திய பங்குசந்தை
சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது
மும்பை: தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் தொடங்கிய சில விநாடிகளில் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலையடைந்துள்ளனர்
சர்வதேச பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் சரிந்து 33,742 என்ற நிலையில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது.

பங்குசந்தை கடும் வீழ்ச்சியால் சில வினாடிகளிலேயே ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவித்த நாள் முதலே இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நாளின் முடிவில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவார்கள் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வாரத்தின் இரண்டாவது நாளான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து 64.36 ரூபாயாக உள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையிலும், அதையொட்டி, மற்ற சில ஆசிய சந்தைகளிலும் காணப்பட்ட சரிவும், இன்றைய இந்திய சந்தையின் தொடர் சரிவுக்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications