பூத்துக் குலுங்கும் சூரியகாந்திப் பூக்கள்- அமோக விளைச்சலால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!
தூத்துக்குடி: எட்டயபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சூரியகாந்தி பூ அதிகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பருவ மழை தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பெய்யவில்லை. இந்த நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அரசு நஷ்ட ஈடு கொடுக்காததால் இந்த வருடம் என்ன செய்வது என திகைத்து போய் இருந்தனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அவர்கள் பாசனம் செய்ய விவசாய பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால் போதிய அளவு பெய்த பின்னரும் விடாது பெய்ததால் மருந்து தெளிக்க முடியவில்லை. மேலும் களை எடுக்கவும் முடியவில்லை. இதன் காரணமாக இந்தாண்டும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அசசத்தில் விவசாயிகள் இருந்தனர். விவசாயிகள் யோசனையில் சூரியகாந்தி பூவை பயிரிட்டனர்.
இந்த விதையை எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். பருவம் ஓரு பொருட்டல்ல என்பதால் அதை விதைத்தனர். குறைந்தது கொஞ்சம் மழை பெய்தால் கூட போதும்.
இந்த நிலையில் இந்த வருடம் பயிரிடப்பட்ட சூரியகாந்தி பூ நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனை அறுவடை செய்து விற்பனை செய்ய விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். எப்படியும் அதை நல்ல விலைக்கு விற்காமல் விடப்போவதில்லை என பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications