750 கோடி நஷ்டத்தில் இயங்கிவரும் “டுவிட்டர்” நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: முன்னணி சமூக இணையதளமான டுவிட்டர் ரூபாய் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி சமூக இணைய தளங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் 25 கோடி பேராக அதிகரித்துள்ளது.

அதன் வருமானமும் இந்த 3 மாத காலத்தில் 119 சதவீதம் உயர்ந்து, ரூ.1,500 கோடியாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், டுவிட்டர் இணைய தளம் ரூபாய் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் கணக்கு அறிக்கையில் அந்நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications