5 ஆண்டுக்குள் இந்தியாவில் கிளைகளை விஸ்தரிக்க வால்மார்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப் முடிவு
டெல்லி: இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வால்மார்ட் நிறுவனமும், ஓராண்டுக்குள் ஷாப்பார்ஸ் ஸ்டாப் நிறுவனமும் தங்களுடைய புதிய கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
"வால்மார்ட்" இந்தியா நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பல்பொருள் விற்பனை நிலையங்களை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு வணிகர்களின் மறுவிற்பனைக்கான பல்வேறு பொருட்கள் மொத்த விலையில் விற்பனை செய்யப்படும். அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வால்மார்ட் இந்தியா கடந்த ஆண்டு முதல் பார்தி குழுமத்துடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு தனியே இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் தற்போது நாட்டின் பல நகரங்களில் 20 கடைகளை நடத்தி வருகிறது. ஆக்ராவில் வரும் செப்டம்பரில் 21 ஆவது கடையை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது' என வால்மார்ட் இந்தியா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் ஐயர் தெரிவித்தார்.
தற்போது ஐந்து இடங்களில் இதே காலத்தில் மேலும் 15 இணைய வர்த்தக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் இணையம் வாயிலான விற்பனைக்கு ஐந்து கடைகள் உள்ளன. இதே போன்றுஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனமும் 140 கோடி ரூபாய் விரிவாக்கத் திட்டத்தில் அடுத்த ஓராண்டில் 14 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் தற்போது 73 கடைகள் வாயிலாக ஆடை , அலங்கார சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications