திறமை குறைவு... 2500 பேருக்கு எஸ் வங்கி கல்தா - அதிர்ச்சியில் ஊழியர்கள்
இந்தியாவில் வங்கித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித் திறமை ஆண்டுதோறும் குறைந்துவருகின்றது என்று எஸ் வங்கியானது தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை: திறமை குறைவு காரணமாக சுமார் 10 சதவிகித அடிமட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எஸ் வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வருவாய் வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் திறமை குறைவு, அதிநவீனமயமாக்கல் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற காரணங்களினால் உலகளவில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
அதேபோல், தனியார் துறை வங்கிகளும் தங்களின் ஊழியர்களை திறமை குறைவு என்ற காரணத்தை கூறி பணி நீக்கம் செய்து வருகின்றன. இதில் முதலில் பணி நீக்க நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது எச்டிஎஃப்சி

எச்டிஎஃப்சி வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ஆகும். இந்த வங்கி மேல் மட்ட அளவில் சுமார் 11000 ஊழியர்களை வயது அதிகரிப்பு மற்றும் குறைந்து வரும் பணித் திறமை போன்ற காரணங்களினால் பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.

எஸ் வங்கி
இந்த வரிசையில், தற்போது பிரபல தனியார் துறை வங்கியான எஸ் வங்கியும் இணைந்துள்ளது. எஸ் வங்கியானது, தங்களின் ஊழியர்களில் திறமை குறைவு மற்றும் அதிநவீனமயமாக்கல் என்ற காரணத்தை முன்னிட்டு சுமார் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பதவி உயர்வு
இது பற்றி எஸ் வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியபோது, எங்கள் வங்கியானது, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர்களின் திறமையை அவர்கள் மேற்கொண்ட பணியின் அடிப்படையில் அளவீடு செய்கிறது. அதன் அடிப்படையில் தகுதி மற்றும் திறமையானவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பதவி உயர்வு அளித்துவருகிறது.

திறமை குறைவு
ஆனால், அதே சமயத்தில் திறமை குறைவு கண்டறியப்பட்டால், அவர்களை பாரபட்சம் இன்றி பணி நீக்கமும் செய்து வருகின்றது. இது வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். இவை அனைத்தும் பெரும்பாலான தனியார் துறை வங்கிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையாகும் என்றனர்.

எஸ் வங்கி ஆண்டறிக்கை
இந்தியாவில் வங்கித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித் திறமை ஆண்டுதோறும் குறைந்துவருகின்றது என்று எஸ் வங்கியானது தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரூ. 966 கோடி இலாபம்
எஸ் வங்கியானது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 966 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியான்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 32 சதவிகிதம் அதிகமாகும்.

நாடு முழுவதும் கிளைகள்
எஸ் வங்கியானது தற்போது நாடு முழுவதும் 1020 கிளைகளைக் கொண்டுள்ளது. இது மேலும் 800 கிளைகளை நாடு முழுவதும் துவக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications