ஹரியானா இழுபறி.. ஆட்சியமைக்க நான் உதவுகிறேன்.. கோபால் கந்தா ரெடி.. பாஜகவுக்குதான் டெலிகேட் பொஷிசன்
சண்டிகர்: சர்ச்சைக்குரிய கோபால் கந்தாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து ஆதரவை பெற பாஜக தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், ஹரியானா அரசியல் சூடிபிடித்துள்ளது.
Recommended Video
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவால் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களாவது தேவை.
இந்த நிலையில்தான், கோபால் கந்தா பாஜகவுக்கு ஆபத்பாண்டவராக உருவெடுத்தார். ஆனால் அவரது ஆதரவை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள்.. ஹரியானா தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய 'லால்கள்' பரம்பரை
காங்கிரஸ் அமைச்சர்
கோபால் கந்தா 2012 ஆம் ஆண்டில், காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அவர் தொடங்கிய எம்.டி.எல்.ஆர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு விமான பணிப்பெண்ணின் தற்கொலைக்கு இவர்தான் காரணம் என அப்போது பெரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினார்.
இந்த நிலையில் விமான நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது சேவைகளை நிறுத்தியது. பின்னர் அந்த பணிப் பெண்ணின் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
தனிக்கட்சி
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அப்போது பாஜக பெரும் போராட்டங்கள் நடத்தியது. இதனால் கோபால் கந்தா, அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இதையடுத்து, ஹரியானா லோகித் என்ற கட்சி தொடங்கினார் கோபால் கந்தா. இந்த தேர்தலில் எல்லா இடங்களில் போட்டியிட்டாலும்கூட, கோபால் கந்தா மட்டுமே வெற்றி பெற்றார்.
7 சுயேச்சைகள்
ஆனால், இப்போது பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. மனோகர் லால் கட்டார் மறுபடியும் ஆட்சியமைக்க முன்வந்துள்ள நிலையில், சுயேச்சைகள் ஆதரவை தேடி வருகிறார். இந்த நிலையில்தான், கோபால் கந்தா, பாஜகவுக்கு உதவ முன்வந்தார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியும், தொழிலதிபருமான கோபால் கந்தா, 7 சுயேச்சைகளை, பாஜக பக்கம் இழுத்துவர தேவைப்படும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார். இதற்கு பிரதிபலனாக தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தயக்கம்
இந்த நிகழ்வுகளை பார்த்ததும், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கொந்தளித்துவிட்டார். பாஜகவின் நன்மதிப்பு கெட்டுவிட கூடாது என்றால், கோபால் கந்தாவுக்கு அமைச்சரவையில் இடம் தர கூடாது என்று உமா பாரதி ட்வீட் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், கோபால் கந்தாவுக்கு கேபினெட்டில் இடம் கிடையாது என்று மனோகர் லால் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஹரியானா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.