குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு: 'ஜேஜேபி' துஷ்யந்த் சவுதாலா
சண்டிகர்: தாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு தரப்படும் என ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.
Recommended Video
ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 19 எம்.எல்.ஏக்கள்தான் யார் ஆட்சி என்பதை தீர்மானிக்க உள்ளனர்.

40 இடங்களில் வென்ற பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 31 இடங்களில் வென்ற காங்கிரஸுக்கு 15 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.
தற்போதைய நிலையில் சுயேட்சைகள் ஆதரவுடன் மட்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. சுயேட்சைகளில் ஒருவரான கந்தாதான் பாஜகவுக்கு ஆதரவை திரட்டி வருகிறார். தற்போது கந்தாவுக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் 10 இடங்களில் வென்ற ஜேஜேபியின் எம்.எல்.ஏக்கல் கூட்டம் இன்று சண்டிகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக துஷ்யந்த் சவுதாலா தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது: ஹரியானாவில் 75% வேலைவாய்ப்புகளை இம்மாநில மக்களுக்கே வழங்க வேண்டும்; முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட எங்களது குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம்.
இதுவரை எந்த கட்சியுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இனி சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். ஒரு சில மணிநேரங்களிலோ ஓரிரு நாட்களிலோ நல்ல முடிவு எட்டப்படும். இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications