விநாயகரையே சிறையில் அடைக்கிறது காங்கிரஸ் கட்சி.. ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தாக்கு!
சண்டிகர்: காங்கிரஸ் கட்சியினர் விநாயகரையே சிறையில் அடைக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மோதல் வெடித்த நிலையில், விநாயகர் சிலை போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதைக் குறிப்பிட்டு ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில், "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதனை காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் விநாயகரையை சிறைக் கம்பிகளுக்குள் போடுகிறார்கள். இன்று அதே பழைய காங்கிரஸ் அல்ல, இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் சொல்வதில் காங்கிரஸ் வெட்கப்படாது" என்று மோடி குற்றம்சாட்டினார்.
நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
நாகமங்களா என்ற பகுதியில் மசூதி அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மாண்டியா சர்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கலவரம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டதால், நிலைமையின் தீவிரம் கருதி, போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்யும் போது விநாயகர் சிலையையும் உடனடியாக போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். விநாயகர் சிலை போலீஸ் ஜீப்பில் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனைக் குறிப்பிட்டுத்தான் ஹரியானாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications