ஆட்டம் ஆரம்பித்தது.. ஹரியானாவில் தொடங்கிய ரெசார்ட் அரசியல்.. டெல்லி பறந்த காங். வேட்பாளர்கள்!
ஹரியானாவில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் தற்போது காங்கிரஸ் கட்சியால் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் தற்போது காங்கிரஸ் கட்சியால் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 39 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை.
இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளது. சிறிய கட்சியான ஜன்நாயக் ஜனதா பார்ட்டி (11 பேர் முன்னணி) அங்கு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.
தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!
ஹரியானா எப்படி
இந்த நிலையில் ஹரியானாவில் குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் தங்கள் வேட்பாளர்களை எல்லாம் பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 பேர் வரை தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இதில் 32 பேர் உறுதியாக வெற்றிபெற வாய்ப்புள்ளது.
பாஜக கட்சி
பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை அக்கட்சி வாங்க முயற்சிக்க வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. எம்எல்ஏக்கள் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு கட்சி மாறவும் வாய்ப்புள்ளது. இது போன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை டெல்லி வர சொல்லி இருக்கிறது.
மோசமான நிலை
ஹரியானாவில் உள்ள வேட்பாளர்கள் அங்கிருந்து டெல்லி சென்று, பின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கண்காணிப்பில் ரெசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிங் மேக்கர்ஸ்
அதேபோல் ஜன்நாயக் ஜனதா பார்ட்டியை சேர்ந்த 11 வேட்பாளர்கள் ஹரியானாவில் முன்னிலையில் உள்ளனர். இவர்களும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதால் இவர்களையும் ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் ரெசார்ட்டில் தங்க வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.