Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஃபேல் இருந்திருந்தா...பாக். போக தேவை இல்லை.. நம்ம இடத்தில் இருந்தே அடிச்சு தூக்கலாம்.. ராஜ்நாத்சிங்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் இந்தியாவில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்திருக்க முடியும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இன்று ராஜ்நாத்சிங் பேசியதாவது:

ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் ஒப்படைத்த போது அதில் ஓம் என எழுதினேன். அந்த விமானத்துக்கு புனித கயிறு கட்டிவிட்டேன். இதை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து சர்ச்சையாக்குகின்றனர்..

If we had Rafale fighter, will eliminate terror camps from India, says Rajnath Singh

ரஃபேல் போர் விமானங்கள் இங்கே வரும்போது காங்கிரஸ் கட்சியினரும் அதனை வரவேற்பார்கள். காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய விமர்சனங்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்குத்தான் பலம் சேர்க்கும்.

நம்மிடம் ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் நாம் பாகிஸ்தானின் பால்கோட்டுக்கு போய் தாக்குதல் நடத்தியிருக்க தேவையில்லை. நமது எல்லையில் உட்கார்ந்து கொண்டே அந்த பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல் போனால் ஏற்கனவே 2 துண்டாகத்தான் பாகிஸ்தான் பிளவுபட்டது. இம்முறை பல துண்டுகளாக பாகிஸ்தான் சிதறிப் போகும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+