ஒரேநேரத்தில் 36 ஏவுகணை வந்தாலும் தாக்கி அழிக்கும்.. எதிரி நாடுகளுக்கு இந்தியா செக்- களத்தில் எஸ் 400
சண்டிகர்: பஞ்சாப்பில் எஸ் -400 ரக ஏவுகணை மரிப்பு டிபன்ஸ் சிஸ்டத்தை இந்தியா களமிறக்கி உள்ளது. பாதுகாப்பு கருதி பஞ்சாப்பில் இந்த டிபன்ஸ் சிஸ்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை களமிறக்கி உள்ளது.
Recommended Video
சீனா, பாக். அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எஸ் 400 ஏவுகணை மரிப்பு சிஸ்டம் களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனா, பாக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை வழி மறித்து வானத்திலேயே தாக்கி அழிக்கும் வகையில் இந்த மிஸைல் சிஸ்டம் களமிறக்கப்பட்டுள்ளது.

ஏன்?
திடீரென இந்த மிஸைல் சிஸ்டம் இப்போது களமிறக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்திருந்த நிலையில் ரஷ்யாவின் தயரிப்பான எஸ் 400 மிஸைல் சிஸ்டம் தற்போது களத்தில் பயன்படுத்தப்பட தொடங்கி உள்ளது. கடந்த மாத இறுதியில்தான் இந்திய பாதுகாப்பு படையுடன் ரஷ்யாவின் இந்த மிஸைல் சிஸ்டம் இணைக்கப்பட்டது.

எஸ் 400 இணைப்பு
இந்தியா - ரஷ்யா இடையிலான இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை. இந்த நிலையில்தான் இந்தியா எஸ் 400 மிஸைல் சிஸ்டத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளது.உலகிலேயே அதி வேகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிஸ்டம் S-400 missile சிஸ்டம் ஆகும். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்று கூறலாம்.

எப்படி ?
ஒரு நாட்டை தாக்க வரும் ஏவுகணைகளை, எதிர் ஏவுகணைகளை ஏவி, குண்டுகளை வீசி இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தாக்கி அழிக்க முடியும். எஸ்-400 (S-400) ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும். இது 400 கிமீ தூரத்தில் இருக்கும் போதே குறி வைத்து தாக்கப்படும். 30 கிமீ தூரத்தில் உள்ள ஏவுகணைகளை கூட எஸ்-400 தாக்கி அழிக்கும். எஸ்-400 (S-400) என்பது பல பயன்பாட்டு ரேடார் வசதி கொண்ட multifunction radar கொண்ட சிஸ்டம் ஆகும்.

ரேடார்
அது என்ன multifunction radar என்றால் இதில் இருக்கும் ரேடார் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. தானாக ஆட்டோமெட்டிக் முறையில் ஏவுகணைகளை கண்டுபிடித்து, அதை டார்கெட் செய்து, தாக்கி அழிக்கும். மொத்தம் மூன்று விதமான ஏவுகணைகளை ஏவி எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும். ஒரே நேரத்தில் 36 டார்கெட்டுகளை எஸ்-400 தனது ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications