நாட்டை காட்டி கொடுத்த துரோகி.. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரபல யூடியூபர் கைது.. யார் இவர்?
சண்டிகர்: பாகிஸ்தானுக்காக பஞ்சாபில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மற்றொரு யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்கும், நமக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
கடந்த 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் கெஞ்சியதால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்த இந்திய நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது 15க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு இருந்தார். இதனால் கைதாகும் யூடியூபர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கைதாகி உள்ள யூடியூபர் ஜஸ்பீர் சிங் ‛ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். மொத்தம் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரை இன்று போலீசார் கைது செய்தனர். உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மொஹாலி சிறப்பு நடவடிக்கை பிரிவு போலீசார் ஜஸ்பீர் சிங்கை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர் ரூப் நகர் மாவட்டத்தில் உள்ள மஹ்லான் கிராமத்தை சேர்ந்தவர். இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஷகீர் என்ற ஜட் ரந்தாவாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அதேபோல், டெல்லியில் உள்ள பாகிஸ்தானும் மாஜி அதிகாரியான எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஷ் உடனும் உறவு வைத்துள்ளார். சமீபத்தில், ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications