ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை ஏற்பு.. முதல் கட்டமாக 1,000 பேர் பணி நிரந்தரம்.. அமைச்சர் மா.சு
சென்னை: முதல்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசின் முடிவினை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர் என்றும், படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த 18 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் சுமூக தீர்வு காணப்படவில்லை. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்டார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் சென்னையில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
10 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சி, மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர்கள் வழியிலேயே சிலர் இறங்கினார்கள். இதைதொடர்ந்து இன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நர்சுகள் போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் இன்றும் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் முதல் கட்டமாக 1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், அரசின் முடிவினை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர் என்றும், படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications