சென்னை ஆட்டோ டிரைவர் மாஸ்.. நேரா கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வண்டியை விட்டு.. சிக்கிய கொள்ளையர்கள்
சென்னை: யானைக்கவுனி அருகே ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ டிரைவரின் சாமர்த்தியத்தால் ஹவாலா பணம் சிக்கியது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த பணம் யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர், மாதவரம் பேருந்து நிலையம் அருகே இருந்து 3 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சவாரி சென்றார். யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஓட்டல் அருகே சென்ற போது, ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேசினர். இதனால், அவர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், 3 பேரும் ஏதேனும் குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருப்பார்களோ எனவும் கேள்வி எழுந்தது. பின்னர், சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், யானைக்கவுனி காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்தினார். பின்னர், சற்று நேரத்தில் வருவதாக கூறிவிட்டு நேராக யானைக்கவுனி காவல் நிலையத்திற்கு சென்ற அவர்,அங்கிருந்த காவல்துறையினரிடம் தகவலை தெரிவித்தார்.
ஆட்டோவில் இருந்தவர்கள் தப்ப முயன்ற போது காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்குள் கொண்டு போய் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் ரூ.2 கோடி பணத்தை 4 பண்டல்களாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த யாசின், தாவூத் மற்றும் பைசுல்லா என்பது தெரிந்தது. நெல்லூரில் இருந்து கார் மூலம் இந்த பணம் மாதவரத்திற்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ டிரைவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் பைக்கில் சென்றபோது கொடூரம்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications