தமிழினத்தின் பேராசான் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி
Recommended Video

சென்னை: கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி அவரது சமாதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். இந்தி எதிர்ப்பு, காவிரி பிரச்சினை, இடஒதுக்கீடு முறை, மாநில உரிமை என பெரும்பாலான பிரச்சினைகளுக்கு போராடி தீர்வு கண்டவர்.
இறுதியில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்காக மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. அண்ணா துயில் கொள்ளும் இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கருணாநிதி உயிருடன் இருந்த போதே பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

அனுமதி
அதன்பேரில் அவரது ஆசையை நிறைவேற்ற தமிழக அரசிடம் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. எனினும் தமிழக அரசோ மெரினாவில் ஏற்கெனவே வைக்கப்பட்ட நினைவிடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி அனுமதி மறுத்தது.

நினைவிடம்
இதையடுத்து திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. இறுதியில் இந்த போராட்டத்திலும் கருணாநிதி வென்றார். அவருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.

மலர் அலங்காரம்
அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அன்றாடம் அவரது சமாதியில் வைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் அவர் மறைந்து 100 நாட்கள் ஆகிறது. இதனை அடுத்து அவரது சமாதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ரசித்த வண்ணம்
தாயை பெரிதும் மதித்த அவரது சமாதியில் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதை மெரினாவுக்கு வரும் பயணிகள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.
|
ஸ்டாலின் நெகிழ்ச்சி அஞ்சலி
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications