Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்தாம் வகுப்பு ரிசல்ட்..மாஸ் காட்டும் மாணவிகள்..’இந்த’ மாவட்டம் தான் டாப்! வேலூர் தான் ரொம்ப மோசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ள நிலையில், மாவட்ட அளவில் அரியலூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.

10th class public examination have been released Ariyalur has topped the district level

தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டும் மாணவிகள் ரிசல்ட்டில் மாஸ் காட்டி உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் - 94.53%, மாணவர்கள் 88.58% ஆகவுள்ள நிலையில், இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

மாவட்ட அளவில் அரியாலூர் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. மாவட்ட அளவில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்திருக்கிறது. அங்கு 82.07 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+